கொரோனா தடுப்பூசி முகாம்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை - திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

கொரோனா தடுப்பூசி முகாம்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை - திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள், சிறப்பு பள்ளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் 68 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இதுவரை 2669 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரானா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் பயன்படும் விதமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் முகாம்களில் அவர்களுக்கென தனி வரிசை அமைக்கப்பட்டு முன்னுரிமையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது.

மாற்றுத்திறனாளிகள் அவரவர்  பகுதிகளில் நடைபெற்று வரும் முகாம்களில் 18 வயதிற்கு மேல் உள்ள  அனைவரும் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் முக கவசம் அணிந்து சென்று தடுப்பூசி செலுத்தி பயனடையுமாறு

மேலும் விவரங்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண்0431-2412590 -ல் தொடர்பு கொள்ளலாம் எனவும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KgXsKw3fBDuFxT4NQiE2BW