சிறை காவலரின் நெஞ்சை உருக்கும் மரண வாக்குமூலம்

சிறை காவலரின் நெஞ்சை உருக்கும் மரண வாக்குமூலம்

திருச்சி மாவட்டம் லால்குடி காவல் நிலையம் முன்பு செம்பரை கிராமத்தைச் சேர்ந்த சிறை காவலர் ராஜா (45) என்பவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பு. 84 சதவீத தீக்காயங்களுடன் அவரை மீட்ட லால்குடி போலீசார் லால்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறை காவலர் ராஜா சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜாவிடம் திருச்சி ஜெஎம் 6 நீதிமன்ற நீதிபதி சிவகுமாரிடம், ராஜா வாக்குமூலம் அளித்த போது தான் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்கு விசாரணையின் போது தன்னை தாக்கிய லால்குடி காவல் உதவி ஆய்வாளர் பொற்செழியன், தனது தம்பி நிர்மல் அவரது மனைவி, அவரது மகள் ஆகிய நால்வர் தான் காரணம் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சிறை காவலர் ராஜா உயிரிழந்தார். அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்துள்ளனர். இதனிடையே சிகிச்சை பெற்று வந்த ராஜா உயிரிழந்ததை தொடர்ந்து மரண வாக்குமூலம் அடிப்படையில் எஸ்ஐ பொற்செழியன் உள்ளிட்ட நால்வர் மீதும்

லால்குடி போலீசார் வழக்கு பதிய வாய்ப்பு உள்ளது என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட எஸ்ஐ ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn