திருச்சியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் - மின்சார வாரியம் அறிவிப்பு

திருச்சியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் - மின்சார வாரியம் அறிவிப்பு

திருச்சி மின்பகிர்மான வட்டத்தைச் சார்ந்த கோட்ட அலுவலகங்களில் வரும் ஜீலை 2024 ஆம் மாதம் கீழ்க்கண்ட வேலை நாட்களில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும் 

(1) துறையூர் கோட்டம் - 02.07.2024 ( முதல் செவ்வாய்கிழமை.)

(2) முசிறி கோட்டம் - 05.07.2024 (முதல் வெள்ளிக்கிழமை.)

(3) இலால்குடி கோட்டம் - 09.07.2024 (இரண்டாம் செவ்வாய்கிழமை.)

(4) திருவரங்கம் கோட்டம் - 12.07.2024 (இரண்டாம் வெள்ளிக்கிழமை.)

(5) திருச்சி நகரிய கோட்டம் - 16.07.2024 ( மூன்றாம் செவ்வாய்கிழமை.)

(6) திருச்சி கிழக்கு கோட்டம் - 19.07.2024 (மூன்றாம் வெள்ளிக்கிழமை.)

(7) மணப்பாறை கோட்டம் - 23.07.2024 (நான்காம் செவ்வாய்கிழமை.)

எனவே வரும் ஜீலை 2024 ஆம் மாதத்தில் மேற்குறிப்பிட்டவாறு நடக்க உள்ள பொதுமக்கள் குறை தீர்க்கும் நாட்களில் மின்நுகர்வோர்கள் தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், திருச்சி மின்பகிர்மான வட்டம். பெருநகரம் மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) பொறிஞர் R.கற்பகச்செல்வி B.E., தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision