திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கம்பரசம்பேட்டையில் பொதுமக்கள் சாலை மறியல்!!

திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கம்பரசம்பேட்டையில் பொதுமக்கள் சாலை மறியல்!!

Advertisement

Advertisement

திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கம்பரசம்பேட்டை யில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வந்தது.

Advertisement

கம்பரசம்பேட்டை பகுதியில் கடந்த 5 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. உடனடியாக குடிநீர் வினியோகம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி சாலை

மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் போராட்ட இடத்திற்கு ஜீயபுரம் டிஎஸ்பி செந்தில்குமார், ஸ்ரீரங்கம் தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் அனு பிரியா உள்ளிட்டோர் வந்து பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM