தனலெட்சமி சீனிவாசன் கல்லூரி பேருந்து மீது லாரி மோதி விபத்து - 16 பேர் காயம் - 2 மாணவிகளுக்கு கால் முறிவு!!

தனலெட்சமி சீனிவாசன் கல்லூரி பேருந்து மீது லாரி மோதி விபத்து - 16 பேர் காயம் - 2 மாணவிகளுக்கு கால் முறிவு!!

Advertisement

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே நெடுங்கூர் பேருந்து நிறுத்தத்தில் கல்லூரி மாணவிகளை ஏற்றுவதற்க சாலை ஓரத்தில் நின்ற பெரம்பலூர் தனலட்சுமிசீனிவாசன் கல்லூரி பேருந்து பின்னால் வந்த லாரி மோதியதில் சாலையோர பள்ளத்தில் கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பேருந்தினுள் இருந்த 8 போராசியர்கள், 25 மாணவிகளில் 16 பேர் காயம் அடைந்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

மேலும் 2 மாணவிகளின் கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காயமடைந்த மாணவிகளிகளை சிறுவாச்சூர் பகுதியில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளானர். கல்லூரி பேருந்து விபத்து குறித்து சிறுகனூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.