ராணுவத்திலும் காவல்துறையிலும் பணியாற்றும் சகோதர சகோதரிகளுக்கு ரக்ஷா பந்தன் வெளிப்படுத்தும் நிகழ்ச்சி

ராணுவத்திலும் காவல்துறையிலும் பணியாற்றும் சகோதர சகோதரிகளுக்கு ரக்ஷா பந்தன் வெளிப்படுத்தும்  நிகழ்ச்சி

சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் நிகழ்ச்சி (30.08.2023) புதன்கிழமை அன்று கடைபிடிக்கப்பட்டது.
நாடு முழுவதும் ராணுவத்திலும், காவல்துறையிலும் பணியாற்றும் சகோதர சகோதரிகளுக்கு விசுவ இந்து பரிசத் அமைப்பின் சார்பில் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் ராக்கி கயிறு கட்டி சகோதரத்துவம் கடைபிடிக்கப்பட்டது.

திருச்சி மாவட்ட விசுவ இந்து பரிசத் அமைப்பின் சார்பாக திருச்சி மாவட்டத்தில் உள்ள ராணுவத்திலும், காவல்துறையிலும் பணியாற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் ராக்கி கயிறு அணிவிக்கும்  நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

ராக்கி கயிறு அணிவிக்கும் நிகழ்ச்சிகளில் விசுவ இந்து பரிசத் அமைப்பின் மாத்ரு சக்தி மாவட்ட அமைப்பாளர் ஜெயந்தி சத், சங்க கோட்ட பொறுப்பாளர் பிரபாவதி ஸ்ரீனிவாசன், துர்கா வாஹினி மாவட்ட அமைப்பாளர் சுஜீனா ரங்கராஜன், துர்கா வாகினி பொறுப்பாளர் சுதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் விசுவ ஹிந்து பரிஷத் திருச்சி மாவட்ட செயலாளர் NR. சீனிவாசன் மற்றும் திருக்கோயில் திருமடங்கள் பொறுப்பாளர் ஆனந்த பத்மநாபன் ஆகியோரும் கலந்துகொண்டு காவல் அதிகாரிகளுக்கும் ராணுவ அதிகாரிகளுக்கும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ராக்கி கயிறு கட்டி மகிழ்ந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision