ரேஷன் அரிசி விற்பவருக்கு அரிவாள் வெட்டு - ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.

ரேஷன் அரிசி விற்பவருக்கு அரிவாள் வெட்டு - ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.

திருச்சி பாலக்கரை மேம்பாலம் கீழ்பகுதியில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் ஒருவரை பின் தலையில் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மீட்டு காவல் துறையினர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர் யார் என்று விசாரித்த பொழுது, பீமநகர்  ஆனைகட்டி மைதானம் பகுதியை சேர்ந்த சிவனேசன் என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இரண்டு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் யார் என்று காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். 

சிவனை சேனை வெட்டியதாக லால்குடி சேர்ந்த கலைபுலி, திருவரம்புரை சேர்ந்த மணிகண்டன், முசிறி சேர்ந்த அமர்நாத், பூதலூர் சேர்ந்த வீரமணி, மருதாண்டக்குறிச்சியை சேர்ந்த பரமகுரு ஆகிய ஐந்து பேரை பாலக்கரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரேஷன் அரிசி கடத்தலில் கொலை முயற்சி சம்பவம் நடந்து இருக்கலாம் என காவல்துறையினர் முதற்கட்ட தகவலை தெரிவித்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO