மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிளர்ச்சி பிரச்சார இயக்கம்

நாடு முழுவதும் வகுப்புவாத அரசியலை முன்னிறுத்தி மக்களை பிளவுபடுத்துவதுடன் சிறுபான்மையினர் மீதான வெறுப்பு அரசியலை முன்னெடுத்து எதேச்சதிகார நடவடிக்கையில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது.
மேலும் மாநில அரசுகளுக்கு நியாயமாக ஒதுக்கீடு செய்ய வேண்டிய கல்வி, இயற்கை பேரிடர் உள்ளிட்ட தேவைகளுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சமான போக்கை கடைபிடிக்கிறது. எனவே தமிழ்நாட்டிற்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாகவும், தினக்கூலியை ரூ 600 ஆகவும் உயர்த்த வேண்டும் என ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தியும் .
தமிழகத்தைப் பொறுத்தவரை அரசு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் உள்ள காலிப் பணியிடங்களை தமிழக அரசு நிரப்ப வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்வதை கைவிட்டு நிரந்தர பணி நியமனங்களை செய்ய வேண்டும். பட்டியல் சாதி மக்கள் மீதும், பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள், பள்ளிகளிலும் அரங்கேறும் சாதி ரீதியான தாக்குதலை தடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் பஞ்சமி நிலங்களை மீட்டு ஏழை,எளிய பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும்.
குடிமனை பட்டாக் கேட்டு விண்ணப்பித்துள்ள மக்கள் அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஒன்றிய - மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதனன்று துவங்கி வரும் 20-ஆம் தேதி வரை கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கத்தில் நடந்த மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்திற்கு ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா தலைமை வகித்தார். இதில் மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஸ்ரீதர், மாநகர் மாவட்ட செயலாளர் வெற்றிச்செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் லெனின், சந்தானம், கிளை செயலாளர்கள் ராஜா, செல்லமுத்து, பகுதிக்குழு உறுப்பினர்கள்
கோவிந்தன், ரகுபதி, சுப்ரமணி, சுரேஷ், செந்தில் உள்பட பலர் கலந்துகொண்டு ராகவேந்திரா ஆர்ச்சிலிருந்து பிரச்சாரத்தை துவங்கி ராஜகோபுரம், தெற்கு வாசல்,சாத்தார வீதி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision