ஒயின்ஷாப் பார் கேஷியரிடம் பணத்தை பறித்த சரித்திரபதிவேடு ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

ஒயின்ஷாப் பார் கேஷியரிடம் பணத்தை பறித்த சரித்திரபதிவேடு ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

கடந்த (11.05.2024)-ந் தேதி, பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழபுதூர் மெயின்ரோட்டில், இ.சேவை மையம் அருகில், சாலையில் நடந்து சென்ற ஒயின்ஷாப் பார் கேஷிரியரிடம், இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி, சட்டை பையில் வைத்திருந்த ரூ.1500/- பணத்தை பறித்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றதாக புகார் பெறப்பட்டது.

இந்த புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணையில், பாலக்கரை, காஜாபேட்டை பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு போக்கரி சந்திரசேகர் (எ) சந்துரு பொந்துரு (30), த.பெ.ஜேம்ஸ் மற்றும் இரண்டு நபர்கள் இக்குற்ற செயலில் ஈடுப்பட்டது தெரியவந்து, எதிரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் விசாரணையில் ரவுடி சந்திரசேகர் (எ) சந்துரு பொந்துரு என்பவர் பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குப்பட்ட பகுதியில் அடிதடி மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக 2 வழக்குகளும், வழிப்பறி செய்தததாக 4 வழக்குகளும், கத்தியை காட்டி மிரட்டியதாக 1 வழக்கும் மற்றும் கோட்டை காவல் நிலைய எல்லைக்குப்பட்ட பகுதியில் வழிப்பறி செய்ததாக 1 வழக்கு என மொத்தம் 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்தது.

எனவே, ரவுடி சந்திரசேகர் (எ) சந்துரு பொந்துரு என்பவரின் தொடர் குற்றநடவடிக்கையை தடுக்கும் பொருட்டு பாலக்கரை காவல் நிலைய ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்று குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision