விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டிருந்த கேபிள் வயா்கள் அகற்றம்

விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டிருந்த கேபிள் வயா்கள் அகற்றம்

திருச்சி மாநகரில் தனியாா் இன்டா்நெட் நிறுவனங்கள், கேபிள் நிறுவனங்கள் பலவும் தங்களது கேபிள் வயா்களை மாநகரப் பகுதியில் விருப்பம்போல அமைத்துள்ளனா். மின்கம்பங்கள், விபத்துக்குள்ளாகும் நிலையில் உள்ள பகுதிகளில் கேபிள் வயா்கள் செல்லக் கூடாது.

தாழ்வான நிலையில் இருத்தல் கூடாது. இதனால் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதுடன், பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படும் நிலை தொடா்ந்து வருகிறது. மேலும், அனுமதியற்ற நிலையில் பலரும் கேபிள் வயா்களை கொண்டு செல்கின்றனா்.

எனவே, இத்தகைய வயா்களை கண்டறிந்து, அவற்றை வெட்டி அப்புறப்படுத்தும் பணி 5 கோட்டங்களிலும் சனிக்கிழமை முதல் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலசிந்தாமணி பகுதியில் உள்ள வயா்கள் சனிக்கிழமை வெட்டி அகற்றப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn