பழிக்கு பழி - திருச்சியில் பொது கழிப்பிடத்தில் இளைஞர் வெட்டி கொலை 

பழிக்கு பழி - திருச்சியில் பொது கழிப்பிடத்தில் இளைஞர் வெட்டி கொலை 

திருச்சி வாமடம் பகுதியைச் சேர்ந்த விஜய் என்கிற வாழைக்காய் விஜய் கடந்த சில மாதங்களுக்கு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 10க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அனைவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை நிசாந்த் (23) என்ற இளைஞர் ராமகிருஷ்ண மேம்பாலம் அருகே உள்ள மாநகராட்சி கழிப்பறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த 5 பேர் நிசாந்தை அரிவாளால் சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதில் படுகாயமடைந்த நிசாந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காந்தி மார்கெட் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஜய் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறைக்கு சென்று திரும்பிய நிசாந்தை பழிக்கு பழியாக விஜய் உறவினர்கள் கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn