தமிழகத்திலேயே மிகப்பெரிய ஆஞ்சநேயர் சிலை திருச்சி ஸ்ரீரங்கம் வந்தடைந்தது

தமிழகத்திலேயே மிகப்பெரிய ஆஞ்சநேயர் சிலை திருச்சி ஸ்ரீரங்கம் வந்தடைந்தது

திருச்சி ஸ்ரீரங்கம் மேலூரில் கொள்ளிட்டக்கரையில் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் அறக்கட்டளை சார்பில்
37 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை அமைக்கும் பணிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆஞ்சநேயருக்கு தமிழகத்தில் சென்னை நங்கல்லூரில் 33 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக நாமக்கல்லில் 18 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி பகுதியில் சிற்பிகளால் கலைநயத்துடன் 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை கடந்த சில மாதங்களாக ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. இந்த ஆஞ்சநேயர் சிலை கடந்த இரு தினங்களாக பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமலும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமலும் மாம்பழச்சாலை வழியாக ஸ்ரீரங்கம் மேலூர் வந்தடைந்தது.

இந்த 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை வருகிற மார்கழி மாதம் அனுமன் ஜெயந்திக்குள் பிரதிஷ்டை செய்ய
திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சிலை நிறுவப்பட்டால் தமிழகத்திலேயே அதிக உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலை என்ற பெருமை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn