அரியாற்று கரை உடைப்பு - 2005ம் ஆண்டு நிலை வந்து விடுமோ? பயத்தில் திருச்சி மக்கள்

அரியாற்று கரை உடைப்பு - 2005ம் ஆண்டு நிலை வந்து விடுமோ? பயத்தில் திருச்சி மக்கள்

திருச்சி மாவட்டத்தை மணப்பாறை பகுதிகளில் இன்று (06.12.21) காலை பெய்த அதீத கன மழையால் அரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அரியாற்றின் இரு கரையும் தொட்டு வெள்ளநீர் சீறிப் பாய்ந்து சென்றது. புங்கனூர் சந்தாபுரம் பகுதியில் உள்ள அரியாற்றில் கடந்த மாதம் 28ம் தேதி ஏற்கனவே கரை உடைப்பு ஏற்பட்ட அதே பகுதியில் இன்று (06.12.2021) மாலை கரை உடைப்பு ஏற்பட்டது. இதனால் திருச்சி மாநகர் பகுதிகளில் மழைநீர் புகுந்து உள்ளது. குறிப்பாக கருமண்டபம், பொன்நகர், இனியானூர், வர்மா நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் வீடுகளை சூழ்ந்துள்ளது.

திருச்சியிலிருந்து மணப்பாறை மார்க்கமாக செல்லக்கூடிய வாகனங்கள் கருமண்டபம் பகுதியில் மழைநீரில் கடந்து செல்ல சிரமப்படுகின்றன. சாலைகள் முழுவதும் பள்ளமாகி விட்டது. ஒரு வழி போக்குவரத்து காவல்துறையினர் அனுமதித்துள்ளனர். இந்த பகுதிகளில் தாழ்வான இடங்களிலுள்ள குடியிருப்புகளை தொடர்ந்து மழை நீரானது சூழ்ந்து கொண்டே இருக்கிறது. நீரின் மட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது .

திருச்சி - மணப்பாறை தேசிய நெடுஞ்சாலையில் பகுதிகளில் தற்போது வெள்ள நீர் ஓடிக் கொண்டு வருகிறது. இரவில் நீர்மட்டம் உயரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் பிராட்டியூர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn