திருச்சி சமயபுரம் கோவிலில் காணிக்கை ரூ.1.21 கோடி!

திருச்சி சமயபுரம் கோவிலில் காணிக்கை ரூ.1.21 கோடி!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு, கடந்த, 14 நாட்களில், 1.21 கோடி ரூபாயை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல்களில், கடந்த, 14 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை, நேற்று கோவில் வளாகத்தில் எண்ணப்பட்டது.

இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில், 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். எண்ணும் பணி முடிந்த நிலையில், உண்டியலில் கடந்த, 14 நாட்களில் மட்டும், 1.21 கோடி ரூபாய் காணிக்கையாக பக்தர்களால் செலுத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது.

Advertisement

மேலும், 1.924 கிலோ தங்கம், 3.988 கிலோ வெள்ளி, 211 வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன