ராம்ஜிநகர் பகுதியில் கஞ்சா விற்ற 5 பெண்கள் கைது

திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வரத்தினம் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் திருச்சி மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க காவல் பிரிவு துணை கண்காணிப்பாளர் ஜெயசீலன் அவர்கள் மேற்பார்வையில்
இன்று (08.06.2025)ராம்ஜி நகர் மற்றும் சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் துறையூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் கதிரவன் மற்றும் தனிப்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் வேட்டையில் கஞ்சா வைத்திருந்த ராம்ஜி நகர் மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி, நளினி, கிருஷ்ணவேணி,ரேவதி, மற்றும் லதா ஆகியோரிடம் இருந்து மொத்தம் ஏழு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து
திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலையத்தில் அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த ஜனவரி மாதம் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வத்தின் அவர்கள் பதவி ஏற்றதிலிருந்து திருச்சி மாவட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே பெருகிவரும் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் பயன்பாட்டைதடுக்கும் பொருட்டு கஞ்சா விற்பனை செய்யும் சமூக விரோதிகள் மீது மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கையில் இதுவரை மொத்தம் 125 கஞ்சா வழக்குகள் பதிவு செய்து
வழக்கில் தொடர்புடைய அனைவரிடமிருந்து கைது செய்யப்பட்ட அவரிடம் மொத்தம் 81.085 கிலோ கஞ்சா மற்றும் அதிக அளவிலான போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 22.4.2025ஆம் தேதி அன்று திருவெறும்பூர் உதவி காவல் கண்காணிப்பாளர் பனவத் அரவிந்த் அவர்கள் தனிப்படையனுடன் காட்டூர் பகுதியில் போதைப் பொருட்கள் தொடர்பான தேடுதல் வேட்டையில் போதை பொருட்களும் போதை மாத்திரைகளும் கஞ்சா மற்றும் ஓஜி கஞ்சா பொருட்களை கைப்பற்றி விற்பனை செய்த அனைவரையும் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை வழக்குகள் தொடர்புடைய 11 பேர் மீது தடுப்பு காவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் மேலும் 10 பேர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட
மதி மயக்கும் பிற போதை வஸ்துக்கள் கஞ்சா விற்பனை குட்கா விற்பனை போலி மதுபான விற்பனை மற்றும் கள் விற்பனை போன்ற சட்டத்திற்கு விரோதமாக யாரேனும் ஈடுபடுவதாக தெரிய வந்தால் பொதுமக்கள் திருச்சி காவல் கண்காணிப்பாளர்கள் உதவி எண் 8939146100-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது தகவல் கொடுப்பவரின் பெயர் விலாசம் ரகசியம் காக்கப்படும்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision