பாரதிதாசன் பல்கலை தடகளப்போட்டி தேசிய கல்லூரி சாம்பியன் பட்டம்

பாரதிதாசன் பல்கலை தடகளப்போட்டி தேசிய கல்லூரி சாம்பியன் பட்டம்

திருச்சி பாரதிதாசன் பல்கலை இடையேயான 39 ஆவது தடகளப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்று, திருச்சி தேசிய கல்லூரி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

திருச்சி பாரதிதாசன் பல்கலை இடையேயான தடகளப்போட்டியில், திருச்சி தேசிய கல்லூரி மாணவிகள் மகளிர் பிரிவு நான்கு புதிய சாதனைகளை படைத்துள்ளனர். 4×100மீ, 4×400மீ, 400&200மீ போட்டிகளில் தங்களுடைய சிறந்த பங்களிப்பின் மூலம் அதிக புள்ளிகளைப் பெற்று கல்லூரிகளுக்கு இடையேயான போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று உள்ளனர்.

இரண்டாம் ஆண்டு இளங்கலை ஆங்கில துறையைச் சேர்ந்த அக்க்ஷரா ஸ்ரீ 2021 -2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த தடகள வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். காவியா முதுகலை யோகா இரண்டாம் ஆண்டு, சுவாதி முதுகலை யோகா முதலாம் ஆண்டு, சபானாதேவி மூன்றாம் ஆண்டு இளங்கலை உடற்கல்வி துறையைச் சார்ந்த மாணவிகள் தங்களுடைய சிறந்த பங்களிப்பின் மூலம் இந்த வெற்றியை கல்லூரிக்கு பெற்று தந்துள்ளனர்.

தங்களுடைய திறமையால் கல்லூரிக்குப் பெருமை சேர்த்த மாணவிகளுக்கு கல்லூரியின் முதல்வர் சுந்தரராமன் கல்லூரியின் துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி ஆகியோர் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர். #திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ 

டெலிகிராம் மூலமும் அறிய... https://t.me/trichyvisionn