சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்கள் மூலம் ரூ.1 கோடி காணிக்கை வசூல்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்கள் மூலம் ரூ.1 கோடி காணிக்கை வசூல்

சக்தி வாய்ந்த  ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாரியம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி, காணிக்கை உண்டியல்களில் காணிக்கையும் செலுத்தி விட்டு செல்கின்றனர்.

அவ்வாறு பக்தர்களால் செலுத்தப்படும் காணிக்கை உண்டியல்களை கோவில் நிர்வாகம் மேற்பார்வையில் மாதம் இருமுறை எண்ணப்பட்டு வருகிறது. நேற்று சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கை 18 உண்டியல்களை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் வளாகத்தில் உள்ள கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் என 200க்கும் மேற்பட்டோர் காணிக்கைகளை என்னும் பணியில் ஈடுபட்டனர்

அவ்வாறு எண்ணியதில் ரூபாய் 1 கோடியே 36 லட்சத்து 94ஆயிரத்து 459ரூபாய் ரொக்கம், 3 கிலோ 181 கிராம் தங்கம், 4 கிலோ 730 கிராம் வெள்ளி , அயல்நாட்டு நோட்டுகள் 206ம், அயல்நாட்டு நாணயங்கள் 206 காணிக்கையாக பெறப்பட்டன என கோவில் இணை ஆணையர்  கல்யாணி தெரிவித்தார்.


இதில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா 11 நாட்கள் உற்சவா அம்மன் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்த போது தற்காலிக உண்டியல் வைக்கப்பட்டதில் மட்டும் ரூ86 ஆயிரத்து 423 ரூபாய் பக்தர்கள் காணிக்கை செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய..... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn