திருச்சி மாநகரில் புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு சீல்

திருச்சி மாநகரில் புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு சீல்

திருச்சி உறையூர் குறத்தெருவில் உள்ள தேநீர்க் கடை மற்றும் கொண்டயம் பேட்டையில் உள்ள தேநீர் கடைகளுக்கு உணவு பாதுகாப்பு ஆணையர் செந்தில்குமார் அவசர தடையான உத்தரவின்படி திருச்சி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் கொண்ட குழுவால் இரண்டு கடைகளுக்கும் சீல் செய்யப்பட்டது

திருச்சி உறையூர் கடையில் 15.04.2021 அன்றும், கொண்டையம் பேட்டையில் உள்ள கடையில் 28.01.2022 அன்றும் முதல் ஆய்வில் அந்தக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா குட்கா போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வது அறிந்து ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் அவர் தொடர்ந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டு மீண்டும் உறையூர் கடையில் 24.02.2022 அன்றும், கொண்டையன் பேட்டை கடையில் 15.03.2022 அன்றும் ஆய்வில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு மீண்டும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அன்றைய தினத்தன்று அவசர அறிவிப்பு வழங்கப்பட்டிருந்தது அதன் தொடர்ச்சியாக சென்னை உணவு பாதுகாப்பு ஆணையர் செந்தில்குமார் அவசர தடை உத்தரவு வழங்கியதன் அடிப்படையில் அந்த மளிகை கடை இரண்டு கடைகளுக்கும் சீல் செய்யப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO