4500 கிலோ ரசாயன மருந்து தடவிய மாம்பழங்கள் பறிமுதல்

4500 கிலோ ரசாயன  மருந்து தடவிய மாம்பழங்கள் பறிமுதல்

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் 4500 கிலோ ரசாயன மருந்து தடவிய மாம்பழங்கள் பறிமுதல்

பொது மக்களிடமிருந்து வந்த புகாரை அடுத்து இன்று திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள இரண்டு பழ கடைகளில் ஆய்வு செய்தபோது அந்த கடைகளில் சுமார் 4, 500 கிலோ செயற்கை முறையில் ரசாயன மருந்து தெளித்து பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு வழக்கு பதிவு செய்வதற்கு இரண்டு சட்டப்பூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த மாம்பழங்கள் திருச்சிராப்பள்ளி அரியமங்கலம் குப்பை கிடங்கில் அழிக்கப்பட்டன மேலும் மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு கூறுகையில் உணவு வணிகத்தில் ஈடுபடுவோர் இதுபோன்ற செயற்கை முறையில் ரசாயன மருந்து தெளித்து பழுக்க வைத்த பழங்களை பொதுமக்கள் உண்ணும் பொழுது அவர்களுக்கு வயிற்று எரிச்சல் வயிற்றுப் போக்கு காய்ச்சல் மற்றும் தொடர்ச்சியாக உட்கொள்ளும்போது நோய் வருவதற்கான காரணமாக அமைந்து விடும் அதனால் உணவு வணிகர்களுக்கும் பொது மக்களுக்கும் இதுபோன்ற பழங்களை விற்கவோ வாங்கவோ கூடாது என அறிவுறுத்தினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO