அசரவைத்த ஆப்பிள் வருமானம் ரூபாய் 49,322 கோடி நிறுவனம் அதிரடி அறிவிப்பு !!

அசரவைத்த ஆப்பிள் வருமானம் ரூபாய் 49,322 கோடி  நிறுவனம் அதிரடி அறிவிப்பு !!

இந்தியாவில் ஸ்மார்ட் போன் விற்பனையில் முன்னணியில் உள்ள அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம், 2023 மார்ச் 31ம் தேதியுடன் முடிவுற்ற நிதியாண்டில் இந்தியாவில் தங்கள் வரு மானம் 48 சதவிகித உயர்வுடன் 49 ஆயிரத்து 322 கோடி ரூபாயை ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தின் லாபம் 77 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு 2022 மார்ச் இறுதியில் 33 ஆயிரத்து 381 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது. இது 2023ம் ஆண்டில் 48 சதவிகித உயர்வுடன் 49 ஆயிரத்து 322 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் மொத்த செலவினங்கள் 31 ஆயிரத்து 693 கோடி ரூபாயாக இருந்தது. என்றும் இது 2023 மார்ச் இறுதியில் 46 ஆயிரத்து 444 கோடி ரூபாயாக உயர்ந்தது. அதேநேரத்தில் நிறுவனத்தின் லாபம் கடந்த ஆண்டில் ஆயிரத்து 263 கோடி ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு 2023 மார்ச் இறுதியில் இரண்டாயிரத்து 230 கோடி ரூபாயாக உயர்ந்தது. இது 77 சதவிகிதம் வளர்ச்சியாகும்.இவ்வாறு அறிக்கையில் ஆப்பிள் தெரிவித்துள்ளது.