திருச்சியில் தாயை திட்டியதால் தந்தையை கொலை செய்த மகன் -  உடலை அடக்கம் செய்ய முயற்சி - பரபரப்பு

திருச்சியில் தாயை திட்டியதால் தந்தையை கொலை செய்த மகன் -  உடலை அடக்கம் செய்ய முயற்சி - பரபரப்பு

திருச்சி தென்னூர் ஆழ்வார் தோப்பு சின்னசாமி நகரை சேர்ந்வர் முருகன்(52) இவருக்கு இரண்டு  மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். நேற்று (02.09.2022) வெள்ளிக்கிழமை இரவு முருகன் மது போதையில் மனைவி பானு என்கிற சாந்தியை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும், இதனால் கணவன் - மனைவிக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அவரது தாயை தரக்குறைவாக பேசியதால் அவரது மூத்த மகன் விஜயகுமார் மதுபோதையில் இருந்ததால் தந்தை முருகனிடம் தகராறில் ஈடுபட்டு அவரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. 

கொலையை மறைப்பதற்கு அவரின் உடலை அவரது வீட்டின் எதிரே உள்ள வாய்க்காலில் வீசி உள்ளார். இந்நிலையில் இன்று காலை அவரது தந்தையை காணவில்லை என நாடகமாடி வாய்க்காலில் கிடப்பது போல் அவரை மீட்டு இறுதி சடங்கில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அவரது தாய் சாந்தி தில்லை நகர் காவல் துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் அவரது வீட்டிற்கு வந்த தில்லைநகர் போலீசார் அவரின் உடலை மீட்டு அவரது மூத்த மகன் விஜயகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகனே தந்தையை மதுபோதையில் கொலை செய்து காவல்துறையினருக்கு தெரியாமல் அடக்கம் செய்ய முயன்ற சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO