ஸ்ரீரங்கம் கோயில் ஆண்டாள், லட்சுமிக்கு பிரத்யேக குளியல் தொட்டி

ஸ்ரீரங்கம் கோயில் ஆண்டாள், லட்சுமிக்கு பிரத்யேக குளியல் தொட்டி

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் யானைகள் ஆண்டாள் மற்றும் லட்சுமி குளிப்பதற்காக ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பஞ்சக்கரை சாலையில் கோயிலுக்கு சொந்தமான "உடையவர் தோப்பில்" 56அடி நீளம் 56 அடி அகலம் , 6.5 அடி உயரத்தில் 3 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட புதிய நீச்சல் குளம் கட்டப்பட்டது.

அந்த குளத்திற்க்கு இன்று (25.10.2021) காலை கோயில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் சிறப்பு பூஜை செய்யப்பட்ட பின்பு கோயில் இணை ஆணையர்  மாரிமுத்து முன்னிலையில் ஆண்டாள் மற்றும் லட்சுமி ஆகிய இரண்டு யானைகளும் முதன் முறையாக குளிக்க வைத்து பார்க்கப்பட்டது. லட்சுமி, ஆண்டாளும் நீச்சல் தொட்டியில் உற்சாக குளியல் போட்டது. நன்கொடையாளர் ஒருவரால் எட்டு லட்ச ரூபாய் செலவில் இந்த குளியல் தொட்டி கட்டப்பட்டதாக தெரிகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn