ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் பக்தர்கள் விடுதி இன்று முதல் மீண்டும் திறப்பு!!

ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் பக்தர்கள் விடுதி இன்று முதல் மீண்டும் திறப்பு!!

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் கொரானோ தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு 20.03.2020 முதல் யாத்திரி நிவாஸ் பக்தர்கள் தங்கும் விடுதியில் பக்தர்கள் தங்க தற்காலிகமாக அனுமதிக்கவில்லை.

Advertisement

அதனைத் தொடர்ந்து கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசு கட்டுப்பாடுகளை தளர்த்திய பின்பு இன்று 10.02.2021 முதல் ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்கள் தங்கும் விடுதி யாத்திரி நிவாஸ் செயல்பட உள்ளது.

மேலும் இதை முன்னிட்டு இன்று பயாத்திரி நிவாஸ் அலுவலகத்தில் பூஜை நடைபெற உள்ளது.

Advertisement

Advertisement