சிறார்களுக்கான கதை எழுதும் பயிற்சி மற்றும் கதை சொல்லல் நிகழ்ச்சி

சிறார்களுக்கான கதை எழுதும் பயிற்சி மற்றும் கதை சொல்லல் நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் சிறார்களுக்கான கதை எழுதும் பயிற்சி மற்றும் கதை சொல்லல் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக (19.05.2024) மற்றும் (20.05.2024) இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்நிகழ்வில் எழுபதிற்கும் மேற்பட்ட சிறார்கள் கலந்து கொண்டனர். நிகழ்வின் இறுதியில் நிறைய சிறார்கள் தங்களுடைய கற்பனைக் கதைகளை படைக்கத் தொடங்கி விட்டனர்.

மேலும் வாசிப்பை மேம்படுத்தும் பொருட்டு மாணவர்களுக்கு தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக நூல்கள் பரிசளிக்கப்பட்டு வாசிப்பு மாரத்தான் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வினை எழுத்தாளர் கதைசொல்லி கார்த்திகா கவின்குமார் பயிற்றுவித்தார். ஆசிரியர் செசிலி கதைகள் கூறினார். மாவட்ட நூலக அலுவலர் அ. பொ. சிவக்குமார் இந்நிகழ்வினை சிறப்பித்தார்.

மாவட்ட மைய நூலகர் தனலெட்சுமி, வாசகர் வட்டத் தலைவர் வீ.கோவிந்தசாமி, வாசகர் வட்ட துணைத்தலைவர் நன்மாறன், வாசகர் வட்ட உறுப்பினர் வைகுண்ட மூர்த்தி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision