அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சார ஆலோசனைக் கூட்டம்

அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சார ஆலோசனைக் கூட்டம்

திமுக ஆட்சியில் கடுமையான விலைவாசி உயர்வு, அனைத்து வரிகளும் பல மடங்கு உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு, விவசாயிகள் விரோத போக்கு, மற்றும் பெருகிவரும் கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட பொருட்களின் விற்பனையை தடுக்க தவறிய திமுக ஆட்சியை கண்டித்து,

முதற்கட்டமாக (21.01.2024) அன்று நடைபெறவுள்ள தெருமுனை பிரச்சார கூட்டங்களை சிறப்பான முறையில் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டமானது திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் Ex.MP தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் மாவட்ட கழக அவைத்தலைவர் M.அருணகிரி, ஒன்றிய கழக செயலாளர்கள் சூப்பர் T.N.T.நடேசன், D.அசோகன், T.N.சிவக்குமார், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் V.D.M. அருண்நேரு, நகர கழக செயலாளர் பொன்னி சேகர், பேரூராட்சி செயலாளர்கள் S.ஜெயசீலன், C.ஜேக்கப் அருள்ராஜ், V.பிச்சை பிள்ளை, பொதுக்குழு உறுப்பினர் I.விஜயா,

மாவட்ட மகளீர் அணி செயலாளர் செல்வமேரி ஜார்ஜ், மற்றும் முன்னாள் மாவட்ட கழக அவைத்தலைவர் அன்பில் தர்மதுரை, மற்றும் கழகத்தினர் பங்கேற்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision