சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் கோடைக்கால சிறப்பு பயிற்சிகள்

சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் கோடைக்கால சிறப்பு பயிற்சிகள்

திருச்சி தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளி மற்றும் அகஸ்தியா சர்வதேச நிறுவனம் - ஒமேகா ஹெல்த் கேர் உடன் இணைந்து மாணவர்களுக்கு அறிவியல் சிந்தனை வளர்க்கும் வகையில் கோடைக்கால சிறப்பு பயிற்சிகள் 24.05.2022 முதல் 31.05.2022 வரை சுப்பையா பள்ளியில் நடைபெறுகிறது.

இதில் ஓவியம் வரைதல் போட்டி, காகித கைவினை பொருள்கள் தயாரித்தல் (ஒரிகாமி ), மந்திர அறிவியல் (நியூட்டனின் மூன்றாவது விதி மற்றும் மேற்பரப்பு இழு விசை), குறைந்த செலவில் மாதிரிகள் தயாரித்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

விடுமுறை நாட்களை பயனுள்ளதாக இருப்பதற்கு மூன்றாம் நாளான இன்றும் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO