திருச்சி செவிலியரிடம் தாலி செயின் பறிப்பு!!

திருச்சி செவிலியரிடம் தாலி செயின் பறிப்பு!!

Advertisement

திருச்சி வயலூர் ரோடு சண்முகா நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் தன்ராஜ். இவருடைய மனைவி மல்லிகா (55). இவர் திருச்சி தில்லைநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் நேற்று பணி முடிந்து பஸ்ஸில் ஏறி சண்முகா நகர் பகுதியில் இறங்கி நடந்து சென்றுள்ளார். அப்போது பின்னால் பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் மல்லிகா கழுத்தில் இருந்த 3 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டுள்ளனர்.

Advertisement

இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.