திருச்சி விமான நிலையம் வந்த தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

தஞ்சை மாவட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்றும் நாளையும் கள ஆய்வு மேற்கொள்கிறார்.அதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் தற்போது திருச்சி வருகை தந்துள்ளார்.திருச்சி விமான நிலையத்தில் முதலமைச்சரை அமைச்சர்கள் கே.என். நேரு ,ரகுபதி ,
கோவி. செழியன், அன்பில் மகேஷ் மெய்யநாதன் உள்ளிட்டோரும்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் T.R. பாலு,திருச்சி சிவா, அருண் நேரு. சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் மற்றும் திரளானதொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர் .விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக ஸ்டாலின் கல்லணை சென்று அங்கு விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார்.
இன்று மாலை டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணையை ஸ்டாலின் திறந்து வைக்கிறார்,அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் செல்லும் முதல்வர்அங்கு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிசிலையை திறந்து வைத்து,திமுக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.பின்னர் இரவு தஞ்சையில் ஓய்வெடுக்கும் முதலமைச்சர் நாளை காலை சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயலாளருமான துரை சந்திரசேகரன் இல்ல திருமண விழாவில்
கலந்து கொள்கிறார்.தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் கலந்து கொள்கிறார்.நாளை மாலை தஞ்சையில் இருந்து புறப்பட்டு திருச்சி வருகை தரும் முதலமைச்சர் திருச்சி விமான நிலையத்திலிருந்து சென்னை செல்ல உள்ளார் .முதலமைச்சர் வருகையை ஒட்டி திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது மேலும் முதலமைச்சர் செல்லும் பாதைகளில்டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision