கொரோனாவால் இறந்த ஊர்காவல்படை சேர்ந்தவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு காவலர் சேமநல நிதி

கொரோனாவால் இறந்த ஊர்காவல்படை சேர்ந்தவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு காவலர் சேமநல நிதி

திருச்சி மாநகர ஊர்காவல் படையில் கடந்த 18.01.2011-ஆம்தேதி முதல் பணிபுரிந்து வந்த அடைக்கலராஜ் என்பவர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த 18.05.21-ந் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி 03.06.2021ந் தேதி இறந்துவிட்டார்.

அவரது குடும்பத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு உதவும் வகையில் தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து ரூ.15,000/- மற்றும் திருச்சி மாநகர ஊர்காவல் படையை சேர்ந்த ஆளிநர்கள் திரட்டிய நிதியையும் சேர்த்து மொத்தம் ரூ.85,000/-க்கான காசோலையை அடைக்கலராஜின் மனைவி ஞானகியூரி என்பவரிடம் இன்று (02.04.22)-ந்தேதி திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன் வழங்கினார்.

மேலும் காவல் உதவி ஆணையர், திருச்சி மாநகர ஆயுதப்படை, ஊர்காவல்படை வட்டார தளபதி, துணை வட்டார தளபதி மற்றும் நிறும தலைவர் ஆகியோர் உடனிருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO