டிரைவரின் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை 1 லட்சம் பணம் திருட்டு

டிரைவரின் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை 1 லட்சம் பணம் திருட்டு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் போலீஸ் பகுதி சரளப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (27). இவர் டிரைவர் வேலை பார்த்து வருகிறார் இவர் இவர் குடும்பத்துடன் பொய்கைபட்டியில் உள்ள அவரது அக்கா ஊரில் உள்ள கோவில் திருவிழாவிற்காக குடும்பத்துடன் சென்றிருந்தார். பின்னர் இன்று காலை வீட்டுக்கு வந்த குமரேசன் வீட்டை பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பீரோவை திறந்து கிடந்துள்ளது. அதில் இருந்த 6 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்ச ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். 

இந்த திருட்டு சம்பவம் குறித்து குமரேசன் புத்தாநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தன் பேரில் புத்தாநத்தம் போலீசார் சம்பவ இடத்தில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் மோப்பநாய் வர வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision