டாடா எலக்ட்ரானிக்ஸ் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் தகவல்

டாடா எலக்ட்ரானிக்ஸ் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் தகவல்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள பெண் வேலைநாடுநர்களை டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு, திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் (29.08.2024) மற்றும் (30.08.2024) ஆகிய தேதிகளில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இச்சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் 12ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐ.டி.ஐ. கல்வித்தகுதிகளையுடைய 18 வயது முதல் 21 வயதிற்குட்பட்ட முன் அனுபவம் இல்லாத பெண் வேலைநாடுநர்கள் சுய விவரக்குறிப்பு (Bio-data), அனைத்து கல்விச்சான்றுகளின் நகல்கள், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். தேர்வு செய்யப்படும் பெண் வேலைநாடுநர்களுக்கு மாதம் ரூபாய் 12,000 நிதி உதவியுடன் 12 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும். மேலும் இப்பயிற்சி காலத்தில் உணவு, போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகள் வழங்கப்படும்.

இச்சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 1500க்கும் மேற்பட்ட பெண் வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளதால், பெண் வேலைநாடுநர்கள் வேலைவாய்ப்பினை பெற இது ஒரு நல்ல வாய்ப்பு என்பதால், திருச்சிராப்பள்ளி மாவட்ட பெண் வேலைநாடுநர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலும் தகவல்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 0431-2413510, 94990-55901 & 94990-55902  என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என்று திருச்சிராப்பள்ளி மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision