திருச்சியில் நடப்போம் நலம்பெறுவோம் நடைப்பயிற்சி திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

திருச்சியில் நடப்போம் நலம்பெறுவோம் நடைப்பயிற்சி திட்டத்தை  மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடப்போம் நலம் பெறுவோம் (Health Walk) என்ற திட்டத்தினை தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைக்கும் விதமாக இன்று (04.11.2023) சென்னையிலிருந்து தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி அண்ணா நகர், அறிவியல் பூங்காவில் நடைபெற்ற விழா நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழன், மாநகராட்சி ஆணையர் இரா.வைத்திநாதன், ஆகியோர் முன்னிலையில் இத்திட்டத்தினை தொடங்கி வைத்து, பொதுமக்களுடன் நடை பயிற்சியில் பங்கேற்றார்.

இந்நிகழ்வில், நகரப்பொறியாளர் சிவபாதம், துணை இயக்குநர் சுகாதராப் பணிகள் (பொ) மாநகர நல அலுவலர் பாலசுப்பிரமணியன். மாநகராட்சி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், அரசு அலுவலர்கள், மண்டலத்தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், நடைபயிற்சி மேற்கொள்ளும் அமைப்புகளின் நிருவாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision