தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு உற்சாக வரவேற்பு

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு உற்சாக வரவேற்பு

தேசிய நல்லாசிரியர் விருது பெற்று திருச்சிக்கு திரும்பி வந்த திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம், பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி ஆஷாதேவிக்கு தொடர்வண்டி சந்திப்பில் மாலை அணிவித்து வரவேற்பு வழங்கப்பட்டது.

பள்ளியின் முன்னாள் மாணவர் பறை இசை முழங்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். ஊர் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இளைஞர்கள் வெடி வெடித்து கொண்டாடினர். பள்ளி ஆசிரியர் ஆரத்தி எடுத்து அழைத்துச் சென்று தலைமை ஆசிரியர் இருக்கையில் அமரச் செய்து வாழ்த்துப் பெற்றனர்.

பள்ளியின் திறப்பால் கர்ம வீரர் காமராசர் கல்வெட்டிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இன்று பிராட்டியூர் கிராமமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn