78 ஆயிரம் பணம் கொடுத்தால் உடலை எடுத்துச் செல்லலாம் – திருச்சி நியூரோஒன் மருத்துவமனை கெடுபிடி!

78 ஆயிரம் பணம் கொடுத்தால் உடலை எடுத்துச் செல்லலாம் – திருச்சி நியூரோஒன் மருத்துவமனை கெடுபிடி!

திருச்சி மணிகண்டம் அருகே பாத்திமா நகரை சேர்ந்தவர் மாரியப்பன் (51). இவருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அன்று கை கால்கள் இழுத்த நிலையில் உடல் நிலை சரியில்லாமல் திருச்சி நியூரோஒன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

பின்பு மருத்துவர்கள் தலையில் அடைப்பு உள்ளதாகவும் ஆபரேஷன் செய்தால் காப்பாற்றிவிடலாம் என கூறியுள்ளனர். அன்று இரவே எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்து ஆபரேஷன் செய்து புதன்கிழமை காலை ஒரு லட்சம் ரூபாய் பணம் கட்டியுள்ளனர். பின்பு கடைசியாக அன்று காலை அவருடைய முகத்தைப் பார்த்தது பின்பு எங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இன்று மதியம் 50 ஆயிரம் பணம் கட்டுங்கள் என கூறியவுடன் கடன் வாங்கி ஒரு 38,000 ரூபாய் கட்டிவிட்ட நிலையில் ஒரு மணி நேரம் கழித்து இறந்துவிட்டதாக மருத்துவமனை சார்பில் தெரிவித்துள்ளனர்.

மேலும் 94 ஆயிரம் கொடுத்தால்தான் உடலை தருவோம் எனவும் தற்போது 78,000 கொடுத்தால் உடலை எடுத்துச் செல்லலாம் என கூறி கூறிவந்த நிலையில் உறவினர்கள் மருத்துவமனை வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement