திருச்சி காந்தி மார்க்கெட் அருகே கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

திருச்சி காந்திமார்கெட் அருகே உள்ள தாராநல்லுார் கிருஷ்ணாபுரத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த அடுக்குமாடியில் 22 வீடுகள் உள்ள நிலையில் 8 வீடுகளில் மட்டும் குடியிருந்து வந்துள்ளனர். இந்த கட்டிடத்தின் மத்தியில் பால்கனி உள்ளது.

இந்நிலையில் ஒருபுறத்தில் உள்ள பால்கனி நேற்று இரவு திடீரென  இடிந்து விழுந்தது. இதில் பெரியநாயகி (75) என்கிற மூதாட்டி உள்ளிட்ட 4 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த மூதாட்டியை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த விபத்து காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருச்சி மாநகராட்சியினர் கட்டிடத்தின் உறுதி தன்மை மற்றும் உரிமம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn