அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவ மாணவியிடம் நலம் விசாரித்த அமைச்சர்

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவ மாணவியிடம் நலம் விசாரித்த அமைச்சர்

மின்சாரம் தாக்கி திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும் திருச்சி தாராநல்லூரைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரின் மகள் தேவதர்ஷினி (21),  மகன் முகிலன் (17) ஆகியோரை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (10.7.2022) நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

இவர்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்கிட இம்மருத்துவமனையின் முதல்வர் டாக்டர். டி. நேரு அவர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் உடனிருந்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO