ஆடு திருட வந்த இருவரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள் 

ஆடு திருட வந்த இருவரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள் 

திருச்சி மாவட்டம் சமயபுரம் மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதியில் கடந்த 9 நாட்களாக அதிகளவில் ஆடுகள் திருட்டுப்போனது குறித்து மண்ணச்சநல்லூர் மற்றும் சமயபுரம் காவல்நிலையத்தில் 10த்திற்கும் மேற்பட்டோர் புகார் பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமயபுரம், பனமங்கலம் பகுதியில் உள்ள தரிசு நிலங்களில் ஆடுகள் மேய்ந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் ஆடுகளை திருட முயன்றுள்ளனர். இதனை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் திருடர்கள் இருவரையும் விரட்டிய போது, திருட வந்த இரு இளைஞர்களும் கீழே விழுந்து காயமடைந்தனர்.

ஆடு திருட வந்த இருவரையும் பிடித்து அப்பகுதி மக்கள் கொள்ளிடம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் போலீஸார் அவர்களிடம் விசாரணை செய்ததில் திருவாணைக்காவல் பஞ்சகரை பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் ஜீவா (22), திருச்சி கருமண்டபம் ஆர்எம்எஸ் காலனி பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் ராகவன் என்பது தெரிய வந்தது.

பொது மக்கள் விரட்டிய போது கீழே விழுந்ததில் காயமடைந்ததால் இருவரையும் போலீஸார் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருடுதற்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn