திருச்சியில் நாளை வாக்கு எண்ணும் பணியில் 459 நபர்கள் பணிபுரிய உள்ளனர்

திருச்சியில் நாளை வாக்கு எண்ணும் பணியில் 459 நபர்கள் பணிபுரிய உள்ளனர்

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021 திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஜமால் முகமது கல்லூரியிலும், திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு சாரநாதன் பொறியியல் கல்லூரியிலும், இலால்குடி, மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு சமயபுரம் இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியிலும், துறையூர், முசிறி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு துறையூர் இமயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள் முன்னிலையில் ஒவ்வொரு தொகுதியிலும் 14 மேஜைகள் போடப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர் ஒருவர், வாக்கு எண்ணிக்கை உதவியாளர் ஒருவர், நுண்பார்வையாளர் ஒருவர் ஆகியோர்  என மொத்தம் 459 நபர்கள் பணிபுரிய உள்ளார்கள். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஒவ்வொரு மேஜையிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF