திருச்சி அருகே சிமெண்ட் டேங்கர் லாரி விபத்து

திருச்சி அருகே சிமெண்ட் டேங்கர் லாரி விபத்து

அரியலூர் சிமெண்ட் தொழிற்சாலையிலிருந்து சிமெண்ட் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று துறையூர் வழியாக நாமக்கல் நோக்கி சென்றது. அப்போது டேங்கர் லாரி துறையூர் பைபாஸ் ரவுண்டானா அருகே வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

லாரி கவிழ்ந்ததில் உள்ளே இருந்த சிமெண்ட் துகள்கள் சாலையில் கொட்டியது லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான பொழுது அருகே வேறு வாகனங்கள் வராததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற துறையூர் காவல்துறையினர் அப்பகுதியில் போக்குவரத்தை சரி செய்தனர்.

மேலும் தப்பி ஒடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர். டேங்கர் லாரி ஓட்டுநர் போதையில் இருந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision