ஶ்ரீரங்கம் தொகுதியில் அதிரடி ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி

ஶ்ரீரங்கம் தொகுதியில் அதிரடி ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி

திருச்சி ஶ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நாள்தோறும் ஆய்வு செய்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

இதன் ஒருபகுதியாக இன்று மணிகண்டம் ஒன்றியம் அதவத்தூர் பாளையத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் திறக்கப்படாமல் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த சமுதாய கூடத்தை சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி நேரில் சென்று ஆய்வு செய்து உடனடியாக சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்க ஆலோசனை வழங்கினார். 


இதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி ஆய்வு செய்தார். பின்னர் இங்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்தார்.

இந்த ஆய்வில் போது திருவரங்கம் திருக்கோவில் இணை ஆணையர் மற்றும் இந்து அறநிலை துறை, மாநகராட்சி அதிகாரிகள், மணிகண்டம் யூனியன் செயலாளார் மாத்தூர் அ.கருப்பையா மற்றும் அதவத்தூர் ஊராட்சி செயலாளார் கொடியரசு, பகுதி செயலாளார் ராம்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve