திருச்சி மாநகரில் ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் கிடையாது

திருச்சி மாநகரில் ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் கிடையாது

திருச்சி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் கொள்ளிடம் கிணறு 3 நீருந்து நிலையத்திலிருந்து உந்தப்படும் பிரதான நீர் குழாயில் உறையூர் நாச்சியார் கோவில் சாலையில் பாலா மெடிக்கல் அருகில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக செல்கிறது.

குழாயில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பொருட்டு மாநகராட்சியால் நாளை (11.12.2021) அன்று பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் (12.12.2021) ஒரு நாள் மட்டும் புத்தூர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மூலம் வழங்கப்படும் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது.

(13.12.2021)ஆம் தேதி அன்று வழக்கம்போல் குடிநீர் விநியோகம் நடைபெறும். இதனால் பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறு தனி அலுவலர் மற்றும் ஆணையர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JkCD459G9UQE7IpwNM1sth

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn