திருச்சி எஸ் பி அலுவலகம் எதிரே வாடகைக்கு வீடு பார்ப்பது போல் வந்து திருட்டு

திருச்சி எஸ் பி அலுவலகம் எதிரே வாடகைக்கு வீடு பார்ப்பது போல் வந்து திருட்டு

திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் எதிரே சுந்தர்ராஜ் நகர் பகுதி உள்ளது. அங்கு திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரி அப்பகுதியில் வீடு கட்டி வசித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் வீட்டின் மாடி காலியாக உள்ளது. அதனால் வீடு வாடகைக்கு உள்ளது என Tolet போர்டு மாட்டி உள்ளார். இதனை பார்த்து பல்வேறு நபர்கள் வீடு வாடகைக்கு கேட்டு வந்து உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக ஒரு நபர் வீடு பார்ப்பதற்த தொடர்ந்து வந்துள்ளார். அந்த நபர் மீண்டும் இன்று காலை வீடு பார்ப்பதற்காக வந்து உள்ளார். 

இந்நிலையில் அமலதாஸ் வங்கிக்கு கிளம்பி கொண்டு உள்ளார் அப்போது வந்த அந்த நபர் அமலதாஸ் கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் நகையை பறித்து உள்ளார். நகையை பறி கொடுத்த நபர் திருடிய நபரின் இரு சக்கர வாகனத்தை பின்னால் பிடித்து உள்ளார். ஆகினும் திருடிய நபர் இரு சக்கர வாகனத்தை வேகமாக இயக்கி உள்ளார். இதனால் அவர் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டு கீழ விழுந்து உள்ளார். இதை தொடர்ந்து சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கு வந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே உள்ள தெருவில் வாடகைக்கு வீடு பார்ப்பது போன்று வந்து திருடிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision