திருச்சியில் நகை கடைகளை மூன்று மணி நேரம் அடைத்து போராட்டம்

திருச்சியில் நகை கடைகளை மூன்று மணி நேரம் அடைத்து போராட்டம்

மத்திய அரசின் தங்க நகை சட்டத்தை (HUID) வேண்டாம் என வலியுறுத்தி திருச்சியில் உள்ள நகை கடைகளை மூன்று மணி நேரம் அடைத்து போராட்டம் நடத்தினர்.

அனைத்து நகைகளிலும் ஹால்மார்க் முத்திரை பதிக்க வேண்டும் என்ற நடவடிக்கையை வரவேற்கிறோம் எனினும் ஹால்மார்க் அடையாள எண் பதிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாலும், தாமதம் உள்ளிட்ட காரணங்களினாலும் கைவிடவேண்டும் என வலியுறுத்தி திருச்சி பெரிய கடை வீதி, சின்னக்கடை வீதி பகுதிகளிலுள்ள நகை கடை வியாபாரிகள் கடைகளை அடைத்தும், பதாகைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn