முயல் வேட்டையாடிய 3 பேர் கைது

முயல் வேட்டையாடிய 3 பேர் கைது

இரவு நேரத்தில் டார்ச்லைட் பொருத்தி முயல் வேட்டையாட முயன்ற 3 பேரை வனத்துறையினர் பிடித்துள்ளனர்.திருச்சி மாவட்ட வன சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில், நேற்று 17.02.20222ம் தேதி இரவு ரோந்து பணியின் போது முயல் வேட்டையாட முயன்ற போது 3 நபர்கள் பிடிக்கப்பட்டனர்.

வனத்துறையினர் நடத்திய விசாரணையில் R.சிவராஜ் (20) அம்பலகாரத் தெரு, பெரியகாட்டுகுளம், G.அரவிந்த் (20) கட்டயம் பள்ளம், வடக்கு தெரு, P.ராஜசேகர் (19), வடக்குத்தெரு, கள்ளவாய்பட்டி, திருச்சி என்ற விவரங்கள் தெரியவந்தது .

மேற்கண்ட குற்றவாளிகளிடம் இருந்து செல்போன் - 2,ஹெட் டார்ச் லைட்- 1  எலக்ரானிக் கருவி (பேட்டரி) – 1 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேற்கண்ட மூன்று குற்றவாளிகள் மற்றும் மேல்நடவடிக்கை எடுக்கும் பொருட்டு ஒப்படைக்கப்படுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze

#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.me/trichyvisionn