மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து - 2 பேர் காயம்

மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து - 2 பேர் காயம்

திருச்சி மாவட்டம். மணப்பாறை அருகே பிள்ளையார் கோவில்பட்டி என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு மணல் கடத்தி சென்ற டிப்பர் லாரி நிலைதடுமாறி விபத்துகுள்ளானது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவயிடத்துக்கு சென்ற புத்தாநத்தம் போலீசார் காயமடைந்த லாரி ஓட்டுநர் சேர்வைகாரன்பட்டியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (39), உதவியாளர் வடக்கு இடையபட்டியை சேர்ந்த சுப்ரமணி மகன் அஜித்குமார்(21) ஆகிய இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து டிப்பர் லாரியை கைபற்றி பறிமுதல் செய்த போலீஸார், மணல் கடத்தல் தொடர்பாக விசாரணை நடத்தினர். இதில் மணல் கடத்தலில் பயன்படுத்தபட்ட டிப்பர் லாரி, வடக்கு இடையபட்டியை சேர்ந்த திமுக பிரமுகர் நாகராஜ் - திமுக ஒன்றிய கவுன்சிலர் கலைசெல்வி ஆகியோரின் மகன் தர்மராஜ் (30) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து மணல் கடத்தலில் தொடர்புடைய தர்மராஜ், டிரைவர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிந்த புத்தாநத்தம் போலீஸார் தலைமறைவான திமுக ஒன்றிய கவுன்சிலரின் மகனை தேடி வருகின்றனர். கடந்த மாதம் நடந்த மணல் கடத்தல் வழக்கில் கைது செய்யபடாமல் தலைமறைவாக இருந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் மகன் தர்மராஜ், மீண்டும் மணல் கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மணல் கடத்தல் சமந்தமாக வடக்கு இடையபட்டியை சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் கலைசெல்வியின் கணவர் நாகராஜ் மீது வழக்கு உள்ள நிலையில், மகன் தர்மராஜ் மீது மணப்பாறை, புத்தாநத்தம் காவல்நிலையத்தில் ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது என்பது குறிபிடதக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn