தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை ஏபிவிபி வன்மையாக கண்டிக்கிறது

தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை ஏபிவிபி வன்மையாக கண்டிக்கிறது

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் தென் தமிழக மாநில செயலாளர் சசிகலா நீட் தேர்வு தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார் இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பு நாடு முழுவதும் பல்வேறு விதமான ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து வருகிறது.

பல்வேறு ஏழை மாணவர்களுக்கு மருத்துவம் படிக்கும் வகையில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் நீட் தேர்வை அனுமதிக்க மாட்டோம், நீட் தேர்வை தமிழகத்தில் எழுத விடமாட்டோம் எனக் கூறி தமிழக மாணவர்கள் நலனில் அக்கறை கொள்ளாமல் மாணவர்களை அச்சத்திலும், பயத்திலும் ஆழ்த்திய மாணவ சமுதாய விரோத திமுக அரசை  
வன்மையாக கண்டிக்கிறோம்.

தற்பொழுது நீட் தேர்வு நடைபெறுமா, நடைபெறாதா என்ற அச்சத்தினாலும், நீட் தேர்வு நடைபெறுமா, நடைபெறாதா என்ற குழப்பத்திலும் மாணவர் சதீஷ் உயிரிழந்துள்ளார். இந்த உயிரிழப்புக்கு திமுக அரசு தான் காரணம். இந்த உயிர் இறப்பிற்குப் பிறகு இன்றைய தினம் தமிழக சட்டப்பேரவையில் நீட்தேர்வு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர் இந்த தீர்மானத்தை ஏபிவிபி வன்மையாக கண்டிக்கிறோம்.

இதுபோன்று தொடர்ந்து மாணவர்களின் எதிர்காலத்தில் திமுக அரசு விளையாடி வருகிறது இது போன்ற செயல்களில் அரசு தொடர்ந்தால் ஏபிவிபி தேசிய மாணவர் அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடைபெறும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn