வெயிலின் கொடுமை பொதுமக்களுக்கு மோர் பந்தல் அமைத்த போக்குவரத்துக் காவலர்கள் மற்றும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள்

வெயிலின் கொடுமை பொதுமக்களுக்கு மோர் பந்தல் அமைத்த போக்குவரத்துக் காவலர்கள் மற்றும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள்

கோடை வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் திருச்சியில் கடந்த இரண்டு வாரங்களாகவே கோடை வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. இது மட்டுமின்றி அனல் காற்று வீசுவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் தனியார் அமைப்பினர் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் ஒருபகுதியாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் ஷேர் ஆட்டோ உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. எப்பொழுதும் பரபரப்பாக காட்சி அளிக்கக் கூடிய பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். தற்போது கோடை வெப்பம் அதிகரித்து உள்ள நிலையில் பொதுமக்களுக்கும் பேருந்து பயணிகளுக்கும் கோடை வெப்பத்திலிருந்து தவிர்த்த மோர் மற்றும் குளிர்பானம் வழங்கப்படுகிறது.

பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் போக்குவரத்தை சீர் செய்யும் போக்குவரத்து காவலர்கள் பொதுமக்களின் நலனில் அக்கறை செலுத்தி இந்த நீர்மோர் பந்தல் அமைத்து இருப்பது பொது மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது. கோடை வெப்ப தாக்கத்தில் சமாளிக்க இந்த மோர் பந்தல் வைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக போக்குவரத்து காவலர்கள் மற்றும் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO