"உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில்" பல்வேறு பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

"உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில்" பல்வேறு பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் பணிகள் குறித்து திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் ஆய்வு செய்தார். முன்னதாக காடுவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆய்வு செய்து

 காலை உணவு திட்டம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இடையே கலந்துரையாடினார். பின்பு நத்தம் கிராமத்தில் கலைஞர் கனவு இல்ல பயனாளிகள் இல்லத்தை ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கினார்.

எம்.புத்தூரில் வேளாண்மை துறை மூலம் முதலமைச்சரின் "மண்ணுயிர் காத்து மண்ணில் காப்போம்* திட்ட பயனாளி தோட்டத்தில் ஆய்வு செய்தார். பாலசுமுத்திரம் அரசு இ- சேவை மையம் அரசு கால்நடை மருத்துவமனை, நியாய விலை கடை,மற்றும் தொட்டியம் கொங்குநாடு கல்லூரியில் நான் முதல்வர் திட்டம் பற்றி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். 

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் பல்வேறு பணிகளை ஆய்வு செய்த பின், இவருடன் முசிறி கோட்டாட்சியர் ராஜன் தொட்டியம் வட்டாட்சியர் சேக்கிழார், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கிருஷ்ணவேணி, துணைத் தலைவர் காடுவெட்டி சத்தியமூர்த்தி, ஒன்றிய ஆணையர்கள் ஞானமணி, செந்தில்குமார், பொறியாளர் இலக்கியா, வருவாய் ஆய்வாளர் ஜீவா நாகராஜ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision