பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் - 1370 மனுக்களுக்கு தீர்வு

பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் - 1370 மனுக்களுக்கு தீர்வு

மக்களுடன் முதல்வர் முகாம், காவல்துறை இயக்குநர், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோர்களிடம் கொடுத்த புகார் மனுக்களின் மீது தீர்வு கண்டறியும் வகையில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம். தமிழக முதலமைச்சரின் உத்தரவின்பேரில், திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையில் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

அதன்படி இன்று 18ம் தேதி திருச்சி மாநகரம், கே.கே.நகர் ஆயுதப்படை சமுதாய கூடத்தில், பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் காவல் ஆணையர் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் இச்சிறப்பு முகாமிற்கு நேரில் வந்து கொடுத்த 38 மனுக்கள் பெறப்பட்டு உரிய அதிகாரிகளுக்கு தீர்வு கான அறிவுரை வழங்கப்பட்டது.

மேலும் தமிழக முதல்வர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட "மக்களுடன் முதல்வர்” முகாம், முதலமைச்சரின் தனிப்பிரிவு, காவல்துறை தலைமை இயக்குநரிடம் நேரடியாகவும், தபால் மற்றும் ஆன்லைன் மூலமாகவும் பொதுமக்கள் கொடுத்த 1510 மனுக்கள் பெறப்பட்டு, 1370 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, மீதம் உள்ள 140 மனுக்கள் சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களின் மூலம் விசாரணை நடத்தி விரைவில் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் இந்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் முதல் சிறப்பு குறைதீர்ப்பு முகாமில் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் பொதுமக்கள் நேரில் கொடுத்த 1172 மனுக்களில் 854 மனுக்கள் மீது துரிதமாக தீர்வு காணப்பட்டும்,

மீதம் உள்ள மனுக்கள் மீது முறையான விசாரணை நடைபெற்று வருகிறது. இம்முகாமில், காவல் துணை ஆணையர் தலைமையிடம் மற்றும் காவல் துணை ஆணையர் (தெற்கு), காவல் சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision