விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முயற்சி - போலீசாருடன் தள்ளு முள்ளு!!

விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முயற்சி - போலீசாருடன் தள்ளு முள்ளு!!

வேளாண் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய கோரியும் டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக திருச்சி ஜீயபுரம் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டனர்.

 Advertisement

ஜீயபுரம் கடைவீதியில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் வினோத் மணி தலைமையில் ஊர்வலமாக வந்து ரயில் மறியலில் ஈடுபட முயற்சி செய்த போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர். தடுப்பு வேலிகளை தாண்டி மறியலில் ஈடுபட முயற்சி செய்தபோது காவல்துறையுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பிறகு குண்டுகட்டாக அவர்களை தூக்கி காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS